Friday, January 30, 2015

சிந்தனை

சிந்தனைகள் அதிகம் படித்தவர்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. அதி உயர கட்டிடங்கள் எழுப்பபட்ட காலத்தில் லிப்டில் பயணம் செய்யும் பயணிகளின் மன அழுத்தத்தை கட்டுபடுத்தவும் அவர்களின் கவனத்தை திசை திருப்பவும் என்ன செய்யலாம் என்று ஒரு லிப்ட் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஆலோசனை நடந்து கொண்டிருந்தது . பலர் பல வித கருத்துக்கள் தெரிவித்தனர் அனைத்துமே பொது மேலாளருக்கு திருப்தி அளிக்கவில்லை.
அந்த கூட்டம் முடிந்தது பொது மேலாளர் சிந்தனையில் ஆழ்ந்து இருந்தார் அப்பொழுது அங்கு வந்த அலுவலக சிப்பந்தி அவரின் சிந்தனைக்கான காரணத்தை கேட்டறிந்தார். நான் ஒரு யோசனை சொல்லட்டுமா என்று கேட்டார் பொது மேலாளரும் சொல்லுங்கள் என்றார் ஆர்வத்துடன் ஏன் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை பொறுத்த கூடாது மக்கள் அனைவருமே தங்கள் அழகியலில் ஆர்வம் கொண்டவர்கள் அவர்கள் தங்களை சீர் செய்து கொள்ளவும் அழகு படுத்தி கொள்ளவும் அந்த நேரத்தினை செலவிடுவார்கள் பயண நேரத்தில் உள்ள மன அழுத்தமும் இருக்காது.
பொது மேலாளர் மிகவும் சந்தோசம் அடைந்தார் இதனை அமுல்படுத்தினார் அந்த சிப்பந்தியும் கவுரவிக்கபட்டார். லிப்டில் கண்ணாடி பிறந்த கதை இதுவே.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
எந்த நிலையிலும் அதிகம் கேளுங்கள் மிகவும் பயனுள்ள கருத்துகள் / செய்திகள் / சிந்தனைகள் / ஆலோசனைகளின் பிறப்பிடம் அதுவாக இருக்கலாம்.

Love Thyself


Life is beautiful face any hurdle with confidence . People wish to transform to the wish of others thereby loosing what is their eternity. Be yourself always when you feel thought in you is right wait for the moment. Thyself is a reflexive pronoun which will bring in the reflex in you when you love thyself.



https://www.linkedin.com/pulse/love-thyself-sheik-mohamed-sulaiman?trk=mp-reader-card

இந்தியக் குழந்தையைக் கொத்தப் பார்க்கும் அமெரிக்க ராஜாளி

“அமெரிக்க சதிவலையில் வீழ்ந்துவிட வேண்டாம்” என குடியரசு தின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவுக்கு சீனப் பத்திரிகைகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், “இந்தியா – சீனா உறவு மேம்பட்டு இருநாடுகளுக்கும் இடையே அமைதி மேலோங்க வேண்டும் என சீனா விரும்புகிறது” என குறிப்பிட்டுள்ளார்.



மேலும்  படிக்க  http://www.mrpamaran.com/?p=7239

Art of listening

https://www.linkedin.com/pulse/art-listening-sheik-mohamed-sulaiman

Saturday, January 24, 2015

உச்சத்தில் நிற்கிறது ஊழல். இன்றைய சூழலில் ஊழல் எவ்வாறு நமது வாழ்வியலில் ஒரு அன்றாட அங்கமாகி விட்டதை வேதனையுடன் சித்தரிக்கும் எனது கட்டுரை mr. பாமரனில்  

http://www.mrpamaran.com/?p=7204 

Tuesday, January 20, 2015

வேலை வாய்ப்பு ஒரு மாற்று பார்வை

வேலை வாய்ப்பு ஒரு மாற்று பார்வை இன்றைய சூழலில் இந்த கட்டுரை காலத்துக்கு ஏற்றது. சில நாட்களுக்கு முன்னர் எனது மனதின் வேதனைகளை பிரதிபலித்த சில ஸ்டேடஸ்கள் இன்று கட்டுரை வடிவில். யாரையும் புண்படுத்தும் நோக்கில் இந்த கட்டுரை எழுதப்படவில்லை . இன்றைய இளைஞர்களின் சிந்தனையை பண்படுத்த மற்றும் தட்டி எழுப்பிடுவதே இந்த கட்டுரையின் நோக்கம் 

http://www.mrpamaran.com/?p=7164

Monday, January 19, 2015

Mr. Pamaran.com - எனது பதிவு - உயிர் பறிக்கும் வேகம்

இந்த சகோதரனின் எழுத்துக்கும் http://mrpamaran.comஇணையதளத்தில் மதிப்பளித்து சிறிது தேவையான மாற்றங்களுடன் பிரசுரம் செய்த சகோதரர் Ikhwan Ameer .உங்களை போன்றவர்களின் ஊக்கமே இன்றைய இளைய சமுதாயத்தின் ஆக்கம். உள்ளம் கனிந்த நன்றிகள். இறைவன் போதுமானவன் .

http://www.mrpamaran.com/?p=7149

Friday, January 9, 2015

ஐடி நிறுவனங்கள் - வேலைவாய்ப்பு தற்போதைய சூழல் - சகோதரர் விநாயக முருகன்

ஐடி நிறுவனங்களின் ஆட்குறைப்பு விஷயத்தில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. ஐடி நண்பர்கள் பலரின் ஆலோசனைகளை பேஸ்புக், டிவிட்டர் பதிவுகளில் தொடர்ந்து பார்க்கமுடிகிறது. நான் சந்திக்கும் பெரும்பாலான நண்பர்களிடம் இந்த ஐடி தொழில் இல்லாவிட்டால் என்ன செய்வீங்க என்று கேட்டால் ஒருக்கணம் திகைத்து நிற்பதை பார்த்துள்ளேன். பெரும்பாலும் கல்லூரி கேம்பஸ் நேர்முகத் தேர்வில் தேறி மென்பொருள் நிறுவனத்துக்கு வேலைக்கு வருபவர்கள் முதல் மாதம் சுளையாக இருபதாயிரம், முப்பதாயிரம் என்று வரும்போது என்ன செய்வதென்று தெரியாமல் சாம்சங் கேலக்ஸியும், டெர்பி, லீ ஜீன்சுகளுமாய் வாங்கி குவிப்பார்கள். நடுத்தர வயதினர் இஎம்ஐக்களில் கார்,வீடு வாங்கி சம்பளத்தில் முக்கால்வாசியை கடன் கட்டிக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் கடன் வாங்காமல் வீடு,கார் வாங்க முடியாது என்பது நிதர்சனம் என்றாலும் என்னைக்கேட்டால் சம்பளத்தில் இருபது சதவீதத்துக்கு குறைவாக கடன் வாங்கினால் நல்லது என்பேன். எந்த தொழில் செய்தாலும் பதினெட்டு மாதங்கள் சம்பளத்தை கையில் சேமிப்பாக வைத்திருக்கவும் என்று வாரன் பபெட் சொல்வார்..
சைக்கிளில் சென்று பேப்பர் விநியோகம் செய்தது, ஊரில் அம்மா நடத்திய இட்லிக்கடையில் வேலை, பிறகு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பயிற்சியாளர் வேலை, பத்திரிக்கையில் உதவி ஆசிரியர், மார்கெட்டிங் ரெப், பத்திரிக்கையில் ப்ரீலான்சர் என்று பல வேலைகளை செய்தபிறகே ஐடி நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றவன் நான். ஐநூறு ரூபாய் சம்பளம் வாங்கும்போது இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய் சம்பளத்துடன் புதிய வேலை வரும்.மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும்போது அந்த வேலை பிடிக்காமல் திடீரென ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து ஆயிரம் ரூபாய்க்கு வேலை பார்ப்பேன். நான்கைந்து ஐடி நிறுவனங்கள் மாறி அலைந்துவிட்டேன். இப்போது இருக்கும் வேலை பறிபோய் ஒரு பத்திரிக்கை வேலையோ அல்லது வேறு ஒரு தொழிலோ செய்யும் பட்சத்தில் நான் கெளரவம் பார்க்காமல் அதை செய்வேன். எனது தேவைகள் மிக குறைவு. சிக்கல்கள் அதிகம் இல்லாமல் மிக எளிமையாக வாழ பழகிவிட்டேன். பெரியளவில் கடன் இல்லை. பெரியளவில் சேமிப்பும் இல்லை. ஒரு குழந்தையோடு போதுமென்று நிறுத்திவிட்டேன். எனது உணவுபழக்கமும் மிக எளிமையானவை. இந்த விஷயத்தில் மலையாளிகளை எனக்கு பிடிக்கும். எந்த சூழலிலும் வாழ பழகியவர்களை வாழ்க்கை அப்படியொன்றும் பெரிதாக தண்டித்து விடாது என்று உறுதியாக நம்புவன். சிக்கனத்தை, சேமிப்பை, எளிமையை கொண்டாடியவர்கள் தமிழர்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. தவிர வேலை இழப்பு என்பது வருத்தமான விஷயம் என்றாலும் வாழ்க்கை அதனுடன் முடிந்துவிடுவதில்லையே. ஆடம்பரம் மேற்கத்திய வாழ்க்கையிடமிருந்து நாம் கற்றது. போலிக்கெளரவம் நமது ரத்தத்திலேயே ஊறியது. இந்த இரண்டுமே நவீன வாழ்க்கையின் சிக்கல்கள்.

நன்றி : சகோதரர் விநாயக முருகன்

வரிய கவிஞன் குபேரன் ஆனார் வார்த்தைகளில்......

வரிய கவிஞன் குபேரன் ஆனார் வார்த்தைகளில்......

உயிருள்ள மனிதற்கு அருளபடாத ஒன்று

உயிருள்ள மனிதற்கு அருளபடாத ஒன்று உயிரற்ற தொலை தொடர்பு மற்றும் மின்னணு சாதனங்களுக்கு - (Restore Factory settings ) மீட்டெடுக்க தொழிற்சாலை அமைப்பு.

ஒரு பயணியைப் போன்று வாழுங்கள்

ஒரு பயணியைப் போன்று வாழுங்கள்
********************************************
அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அறிவிக்கின்றார்:
அண்ணல் நபிகளார்(ஸல்) என்னுடைய தோளைப் பிடித்துக்கொண்டு சொன்னார்: ‘இந்த உலகத்தில் ஒரு பயணியைப் போன்று அல்லது வழிப்போக்கரைப் போன்று வாழுங்கள்’
நூல் :புகாரி
ஆம். இந்த உலகத்தில் மனிதனின் உண்மையான அந்தஸ்து ஒரு பயணியைப் போன்றதுதான். ஏதோ இங்கேயே காலமெல்லாம் வாழப்போகின்றோம் என்கிற நினைப்புடன் அவன் இந்த உலகத்தில் வாழக்கூடாது. அதற்கு மாறாக இந்த உலகத்தில் அவன் ஒரு பயணியைப் போன்றே நடந்துகொள்ள வேண்டும்.
எந்தவொரு பயணியும் அந்நிய மண்ணில் தன்னுடைய மனத்தைத் தொலைப்பதில்லை. அந்நிய நிலத்தில் அவன் பயணித்துக்கொண்டிருக்கின்ற அந்த வேளையிலும் அவனுடைய மனம் அவனுடைய பிறந்த மண்ணையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கும்.
முற்றிலும் இதைப் போன்றே ஒவ்வொரு மனிதரும் மறுமையின் இல்லத்தில் தம்முடைய மனத்தைப் பிணைத்துக்கொள்ள வேண்டும். மறுமைதான் தம்முடைய நிலையான வசிப்பிடமாக இருக்கின்றது என்பதை உணர வேண்டும். இந்த உலகத்தை முழுக்க முழுக்க அந்நிய நிலமாக நினைக்க வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால் அதற்கும் ஒரு படிமேலாக எந்த ஊரிலும் நிலையாக வாழாமல் ஊர் ஊராகச் சுற்றித் திரிகின்ற, எல்லா நாள்களிலும் பயணித்துக்கொண்டே இருக்கின்ற நாடோடியைப் போன்றே இந்த உலகில் வாழ முற்பட வேண்டும்.
இந்த மனநிலையுடன் மனிதன் வாழத் தொடங்கினால் அவனை அவனுடைய உண்மையான நோக்கத்திலிருந்து இந்த உலகத்தால் திசை திருப்பவே இயலாது. மோகம், பேராசை போன்றவற்றாலும் அவனை நேர்வழியிலிருந்து விலக்க முடியாது.

நன்றி : சகோதரர் அஜீஸ் லுத்புல்லாஹ் 

முஸ்லிம் சகோதரர்களின் இந்த எதிர்வினை சோகமானது. வேடிக்கையானது. முட்டாள்தனமானது.

முஸ்லிம் சகோதரர்களின் இந்த எதிர்வினை சோகமானது. வேடிக்கையானது. முட்டாள்தனமானது.
*******************************************************************************
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணியினர் படித்தாலே பற்றியெரிகின்ற அளவுக்கு சுடுசொற்களைக் கொண்டு சுவரொட்டி ஒன்றை ஒட்டியிருக்கின்றார்கள்.
இது கண்டிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய, அருவருப்பான, கேவலமான செயல்தான் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை.
இந்து முன்னணியினரைப் பற்றியோ அவர்களின் திட்டங்களைப் பற்றியோ தமிழகத்தில் காலூன்றுகின்ற நோக்கத்துடன் அவர்கள் இந்து வாக்கு வங்கியை உருவாக்குவதற்காகச் செய்கின்ற முயற்சிகள் பற்றியோ நான் இங்கு பேச வரவில்லை.
என்னுடைய கவலையெல்லாம் இதனை முஸ்லிம்கள் எதிர் கொண்டுள்ள விதத்தைப் பற்றித்தான். இதனைப் பகிர்ந்து கொண்டும் இதனைக் கண்டித்தும் பதிவிட்டும் பின்னூட்டமிட்டும் தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தியிருக்கின்ற முஸ்லிம்களின் வார்த்தைகளில்தான் எத்துணை வன்மம்..! எத்துணை வெறுப்பு!
‘அயோக்கிய நாய்களா!’,‘தைரியம் இல்லாத பொட்டைகளா’, ‘காவி வேசிகளா’‘தே.... பயலுகளா’, ‘காவி நாய்களா’, ‘நேருக்கு நேர் மோத திராணியற்ற பன்றிகள்’ என்றெல்லாம் சகட்டுமேனிக்குத் திட்டித் தீர்த்திருக்கின்றார்கள்.
இதே போன்ற வசைகள்தாம் தோழர் ஆளூர் ஷாநவாஸின் பதிவுக்குப் பின்னூட்டம் இட்டவர்களின் வாசகங்களிலும் சில நாள்களுக்கு முன்னால் கண்களில் பட்டது.
முஸ்லிம் சகோதரர்களின் இந்த எதிர்வினை சோகமானது. வேடிக்கையானது. முட்டாள்தனமானது. கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
சோகமானது: அண்ணல் நபிகளாரின் அழகிய நடைமுறைகளை அறிந்திராதவர்களாய் இந்த முஸ்லிம் சகோதரர்கள் இருக்கின்றார்கள் என்பதுதான் சோகமானது.
வேடிக்கையானது: அந்தச் சுவரொட்டியை ஈரோட்டின் ஏதோவொரு குறுக்குச் சந்தில் எங்கோ ஒரு மூலையில்தான் ‘அவர்கள்’ ஒட்டியிருக்கின்றார்கள். ஆனால் நம்முடைய சகோதரர்கள் அதனை முகநூலில் பதிவிட்டு, பகிர்ந்து, தாம்தூமென்று குதித்து, ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்து எல்லோரையும் அந்தச் சுவரொட்டியையும் அதில் இருக்கின்ற வாசகங்களையும் பார்க்கச் செய்து விட்டார்கள். இது எத்துணை அபத்தமான செயல் என்கிற உணர்வும் இவர்களுக்கு இல்லாமல் போயிற்றே.
முட்டாள்தனமானது: இந்து முன்னணியிலும் பரிவார் அமைப்புகளிலும் இருக்கின்ற, சார்ந்து இருக்கின்ற அனைவருமே முஸ்லிம் எதிர்ப்பிலும் ஊறிப்போனவர்கள் அல்லர். உலக இலாபங்களுக்காகவே அந்தக் கூடாரத்தில் ஒதுங்கியிருக்கின்றார்கள். இந்த நிலையில் பொத்தாம் பொதுவாக அவர்களை நோக்கி முஸ்லிம்கள் அள்ளி வீசுகின்ற வசைகளும் சுடுசொற்களும் அவர்களை அந்தக் கூடாரத்திலேயே நிலையாகத் தங்க வைத்துவிடும். இவ்வாறாக முஸ்லிம்களின் இந்தக் கண்மூடித்தனமான எதிர்வினை முஸ்லிம்களுக்கே கேடாக அமையும். இதனை விட முட்டாள்தனமான செயல் வேறு ஒன்றைச் சொல்ல முடியுமா?

நன்றி : சகோதரர் அஜீஸ் லுத்புல்லாஹ் 

உறவு

உறவென்பது ஒரு அரிய உணர்வு
இதனை பலப்படுத்துதல் கடினம்
வெட்டிவிடுவது மிக எளிது
யாமறியோம் அதனின் பயனை
நிச்சயம் தேவைப்படும் சில வேளைகளில்
எதிர்பார்ப்பு இல்லாதது எதிர்பாரும் வேலையினில்
கிடைக்காது போனால் பாதிப்பு யாருக்கு
தோழா சிந்திப்பீர் செயல்படுவீர்
வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்திடு வாழவிடு
வாழையடி வாழை தொடர்ந்திடட்டும் நற்கிரியைகள்.
இறைவா அருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள அருள் புரிவாயாக
- ஷேக் முஹம்மத் 

கல்யாண பொண்ணு பெயர் - நகைச்சுவை

கல்யாணப் பொண்ணு
பேர் என்ன?
பேஸ்புக்!
என்னாது அப்படி ஒரு பேரா!
அப்பத்தான் மாப்பிள்ளை பையன்
பொண்ணை கைக்குள்ள வச்சி
பார்த்துக்குவான்!
நன்றி : சகோதரர்  Mohamed Rafiudeen

வெள்ளை காகிதம் கவிதை - பழனி பாரதி

சூரியனுக்குக் கீழ்
ஒரு வெள்ளைக் காகிதத்தை
விரித்து வைத்திருக்கிறேன்
கொல்லப்பட்ட ஒரு மரத்தின் ஆவி 
கடந்துபோவதைப் போல
காற்றில் அது
தானாகப் படபடக்கிறது
அதில்
ஒரு கழுகின் நிழல் விழுகிறது
கூடிழந்த பறவைகளின் எச்சம் தெறிக்கிறது
இந்த வெள்ளைத் தாளில்
சுதந்திரமாக
காதல் கடிதம் எழுதிக்கொள்ள
ஒரு பெண்ணிடம் தரலாம்
காதலின் பொருட்டு
அவள் முகத்தில்
திராவகம் வீசப்பட்டால்
நான் என்ன செய்ய முடியும்?
ஒரு விவசாய நிலத்தின்
பச்சை நிறத்தைத் தீட்டலாம்
அதன் கீழ்
புதைக்கப்பட விருக்கும்
மீத்தேன் வாயுக் குழாய்கள் வெடித்தால்
நான் என்ன செய்ய முடியும்?
இராமேஸ்வரத்தின் கடலில்
இந்தக் காகிதத்தால்
ஒரு படகு செய்து அனுப்பலாம்
இலங்கை இராணுவத்தால்
கொல்லப்படும் மீனவரோடு
இது கரையொதுங்கினால்
நான் என்ன செய்ய முடியும்?
நம் அரசியல்வாதிகளின்
அசல் சொத்துக்கணக்குகளை
இதில் அச்சடிக்கலாம்
இறையாண்மைக்கு எதிராக
கைது செய்யப்பட்டால்
நான் என்ன செய்ய முடியும்?
சூரியனுக்குக் கீழ்
இந்த வெள்ளைத் தாளை
வைத்துக்கொண்டு
நான் என்னதான் செய்ய முடியும்?
- பழநிபாரதி
'இனிய உதயம்' ஜனவரி 2015

டி எம் கிருஷ்ணாவின் கவனத்திற்கு....


டி எம் கிருஷ்ணாவின் கவனத்திற்கு....
*****************************************************
புகழ்பெற்ற மேடை பாடகர் டி எம் கிருஷ்ணா இன்றைய தி இந்து நாளிதழில் பிரெஞ்சு கார்ட்டூனிஸ்ட்களின் படுகொலைகளின் பின்னணியில் ஒரு திறந்த மடல் எழுதியிருக்கின்றார்.
அதில் உலகெங்கும் நடக்கின்ற பயங்கரவாதச் செயல்களை முஸ்லிம் தலைவர்கள் கண்டிப்பதில்லையே ஏன்? என்று அதிகமாக வருத்தப்பட்டிருக்கின்றார். அவருடைய இந்தக் கவலையும் அக்கறையும் பெரிதும் மதிக்கப்பட வேண்டியவையாகும். இந்திய முஸ்லிம்கள் பற்றிய ஒரு தவறான புரிதல் ஊடகம் மூலமாக உருவாக்கப்பட்டு அது எந்த அளவுக்குப் பேருருவம் எடுத்திருக்கின்றது என்பதற்கு டி எம் கிருஷ்ணா அவர்களின் ஆதங்கமே சான்று.
டி எம் கிருஷ்ணா போன்றவர்கள் இது போன்ற தவறான புரிதலுக்கு ஆளாகியிருப்பதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.
முதலாவதாக ஊடகம். முஸ்லிம்களை வில்லன்களாகச் சித்திரிப்பதில் திரைப்படங்கள் முதல் செய்தித்தாள்கள் வரை, தொலைக்காட்சி விவாதங்கள் முதல் இணைய அரட்டைகள் வரை முழு மூச்சுடன் இயங்கி வருகின்றன.
ஒரே ஒரு லேட்டஸ்ட் எடுத்துக்காட்டு, சில நாள்களுக்கு முன்னால் நடந்த பெங்களுர் குண்டுவெடிப்பு தொடர்பான செய்தியை ஊடகங்கள் கையாண்ட விதத்தைச் சொல்லலாம். குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்று ஒரு ட்விட்டர் செய்தி வருகின்றது. முஸ்லிம் தீவிரவாதி மிரட்டல் என்று ஊடகங்கள் அலறின.
அடுத்த நாளே அது முஸ்லிம் பெயரில் தொடங்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் மிரட்டலை வெளியிட்டது முஸ்லிம் அல்ல, ஒரு இந்து பொறியியல் மாணவர் என்கிற உண்மை வெளிப்படுகின்றது. இதனை ஊடகங்கள் எப்படி செய்தி வெளியிட்டன, நினைவிருக்கின்றதா? மன நிலை பாதிக்கப்பட்ட இந்து விடுத்த மிரட்டல் என்றே ஊடகங்கள் அடக்கி வாசித்தன.
இரண்டாவதாக, இஸ்லாத்தின் பெயரால் இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட்டு வருகின்ற கொடூரங்களுக்கும் கொடுமைகளுக்கும் வரம்பு மீறல்களுக்கும் கொலைகளுக்கும் இஸ்லாத்துடனும் முஸ்லிம்களுடனும் எந்தத் தொடர்பும் இல்லை என்றே உலகெங்கும் இஸ்லாமிய இயக்கத் தலைவர்களும் முஸ்லிம் அமைப்புகளின் பொறுப்பாளர்களும் பொதுவான முஸ்லிம்களும் திரும்பத் திரும்பச் சொல்லி வந்துள்ளார்கள். ஆனால் முஸ்லிம் தலைவர்களின் இந்தக் கண்டனங்களும் அறிக்கைகளும் விளக்கங்களும் ஊடகத்தில் வெளியிடப்படுவதே இல்லை.
ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தாலும் உண்மை மறைந்து போய்விடுமா, என்ன? முஸ்லிம்கள் எந்த அளவுக்கு அமைதியை விரும்புகின்றார்கள், எந்த அளவுக்கு பயங்கரவாதச் செயல்களுக்கு எதிரானவர்கள் என்பதை அரசு அதிகாரிகள் பலரும் நேரடியாக உணர்ந்திருக்கின்றார்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றை மட்டும் சொல்வேன். இப்போது நம் நாட்டின் பிரதம பாதுகாப்பு ஆலோசகராக இருக்கின்ற அஜித் டோவல் அவர்களின் கூற்று. அவர் சொல்கின்றார்: ’மதவாதக் கோணத்தில் பயங்கரவாதப் பிரச்னையை அணுகுவதை நாம் கைவிட வேண்டும். எந்தவொரு இந்து அமைப்பைக் காட்டிலும் முஸ்லிம்கள்தாம் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் நமக்குத் துணை நிற்கின்றார்கள். பயங்கரவாதத்திற்கு எதிராக கண்டனத்தையோ தீர்ப்பையோ வெளியிட்ட ஒரே ஒரு இந்து அமைப்பை எனக்குச் சுட்டிக்காட்டுங்களேன்.’
இந்த வீடியோ இணைப்பை இங்கு இணைத்துள்ளேன். சரியாக 54:40 நேரத்தில் அவருடைய இந்த வாசகங்களைக் கேளுங்கள்.
ஆனால் இந்தப் புரிதலும் தெளிவும் பொதுவான நாட்டு குடிமக்கள் வரைக் கொண்டு செல்லப்படவில்லை என்பதுதான் வேதனை.
மூன்றாவதாக, அரசியல் நோக்கங்களுக்காக முஸ்லிம் நாடுகளும் இளைஞர்களும் பகடைக் காய்களாய் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பல்வேறு நாடுகளின் உளவுத் துறைகள் கூலிப்படையினரை வைத்துக்கொண்டு இந்தப் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த உளவுத்துறையினருக்குக் வரையறை இல்லாத பணமும் சுதந்திரமும் தரப்படுகின்றன. இவர்களின் செயல்பாடுகள் எந்தத் தணிக்கைக்கும் உட்படுத்தப்படுவதில்லை. அரசியல் தலைவர்களைக் கொல்வது முதல் பயங்கரவாத ஏஜென்ட்களை உருவாக்குவது வரை இவை முனைப்புடன் செயலாற்றி வருகின்றன. ஒரே ஒரு எடுத்துக்காட்டாக இன்று உலகம் முழுவதும் மிகப் பெரும் பயங்கரவாதி எனப் பேர் பெற்றிருக்கின்ற உஸாமா பின் லாதீனைச் சொல்லலாம். இந்த உஸாமாவுக்குப் பணமும் பயிற்சியும் நெட்வர்க்கும் வசதியும் களமும் செய்து கொடுத்தது சிஐஏ என்கிற உளவுத்துறைதான். ஆக இந்த உளவுத் துறை ஏஜென்சிகள் ஏதேனும் ஒரு வகையில் கட்டுப்படுத்தப்படாத வரை இந்த அவலங்கள் தொடரும் என்பதுதான் உண்மை.
டி எம் கிருஷ்ணா போன்றவர்கள் பிரச்னையின் இந்த மூன்று பரிமாணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான்.
நன்றி : சகோதரர்  டி, அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
டி எம் கிருஷ்ணாவின் கட்டுரை இணைப்பு
http://tamil.thehindu.com/…/%E0%AE%87%E…/article6766998.ece…
பிரதம பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் கூற்று காணொளி இணைப்பு.: (சரியாக 54:40 நேரத்தில் பார்க்க.)

மறுமை நாள் எதற்காக?

மறுமை நாள் எதற்காக?
************************************
‘மறுமை நாள் நம்மீது வராமலிருக்கின்றதே! என்ன விஷயம்?’ என்று நிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள்.
கூறுங்கள்: ‘மறைவானவற்றை அறியக்கூடிய இறைவன் மீது ஆணையாக! அது உங்கள் மீது வந்தே தீரும். வானங்களிலும் பூமியிலும் அணு அளவு பொருள்கூட அவனைவிட்டு மறைந்திருக்கவில்லை. அணுவைவிடச் சிறியதோ, அதைவிடப் பெரியதோ அனைத்துமே ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.’
மேலும் இந்த மறுமை வருவது- நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்துகொண்டிருப்பவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவதற்காகத்தான்! அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான நற்பேறும் இருக்கின்றன.
எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோல்வியுறச் செய்திடக் கடுமையாக முயற்சி செய்தார்களோ அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய மிக மோசமான வேதனை இருக்கின்றது.
(நபியே!) உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கியருளப்பட்டிருப்பது எதுவோ அது முற்றிலும் உண்மையானதென்றும், அதுவே, ஆற்றல் மிக்கவனும் மாபெரும் புகழுக்குரியவனுமான இறைவனின் பாதையைக் காண்பிக்கின்றது என்றும் ஞானமுடையவர்கள் நன்கறிகின்றார்கள்.
திருக்குர்ஆன் அத்தியாயம் 34 ஸபஃ 3-6

நன்றி : சகோதரர் அஜீஸ் லுத்புல்லாஹ் 

சிறந்த பழக்கவழக்கம் - இஸ்லாத்தின் பார்வை / நபி (ஸல்) வழிமுறைகள்



குழந்தைக்கு உடல் நலமில்லை என்றால், தாயுள்ளம் எப்படித் தவிக்கும் என்பதை நாம் அறிவோம்.
குழந்தை மீண்டும் உடல் நலம் பெறும் வரை அதன் அருகிலேயே அமர்ந்து கண்களில் நீர் மல்க, இதயம் உருக இறைவனை நினைத்து அந்தத் தாய் செய்யும் பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும்… அப்பப்பா! அதனால்தான் தாயன்புக்கு ஈடாகத் தரணியில் ஏதும் இல்லை என்று தாய்ப்பாசம் போற்றப்படுகிறது.
“ஒரு தாய் குழந்தை மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறாளோ, அதைவிட எழுபது மடங்கு அதிகமாக இறைவன் தன் படைப்பினங்கள் மீது பாசம் வைத்துள்ளான்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நோயாளிகளைச் சென்று நலம் விசாரிப்பது, இஸ்லாத்தில் பெரிதும் வலியுறுத்தப்பட்ட பண்பாடு ஆகும்.
“ஒரு முஸ்லிமுக்கு, இன்னொரு முஸ்லிம் மீது ஆறு கடமைகள் இருக்கின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், “இறைத்தூதர் அவர்களே, என்ன அந்த ஆறு கடமைகள்?” என்று வினவினார்கள். அதற்கு இறைத்தூதர் கூறினார்:
1. நீங்கள் முஸ்லிம் சகோதரரைச் சந்தித்தால், அவருக்கு ஸலாம் கூறுங்கள்.
2. உங்கள் சகோதரர் ஒருவர் விருந்திற்கு அழைத்தால், அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
3. உங்களிடம் ஒருவர் ஆலோசனை கேட்டால், அவருக்கு நலம் ஏற்படும் வகையில் நல்ல ஆலோசனை வழங்குங்கள்.
4. ஒருவர் தும்மிவிட்டு ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என்று கூறினால், அதற்குப் பதிலாக, ‘யர்ஹமுகல்லாஹ்’ (இறைவன் உனக்கு அருள்புரிவானாக) என்று கூறுங்கள்.
5. ஒருவர் நோய்வாய்ப்பட்டால், அவரை நலம் விசாரிக்கச் செல்லுங்கள்.
6. ஒருவர் இறந்து விட்டால், அவருடைய ஜனாஸா – இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளுங்கள்.
நோயாளியை நலம் விசாரிக்கச் செல்லும்போது அவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அண்ணலார் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
நோயாளியின் தலைக்கு அருகில் அமர்ந்து, அவருடைய தலையையும், உடலையும் தடவிக் கொடுத்து அன்பான ஆறுதல் வார்த்தைகள் கூற வேண்டும். ‘நோய்த் துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, இறைவன் மகத்தான நற்கூலியை வழங்குவான்’ எனும் உண்மையை அவர்களுக்கு இதமாக உணர்த்த வேண்டும்.
ஜைத் இப்னு அர்கம் எனும் நபித்தோழர் கூறுகிறார். “ஒரு முறை கண் வலியால் நான் பாதிக்கப்பட்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிப்பதற்காக வந்தார். என்னைப் பார்த்து, “ஜைதே, உங்களுடைய கண்ணில் இவ்வளவு வலி இருக்கிறதே, என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நான், “வேதனையைத் தாங்கிக் கொள்கிறேன். பொறுமையை மேற்கொள்கிறேன்” என்று பதில் அளித்தேன். உடனே அண்ணல் நபி, “இந்த வலியைத் தாங்கிக்கொண்டு நீங்கள் பொறுமையாக இருப்பதால் அல்லாஹ் உங்களுக்கு சுவனத்தை அளிக்கிறான்” என்று கூறினார்கள்.
அதுமட்டுமல்ல, வலி அல்லது நோய்த்துன்பம் அதிகமாக இருக்கும் இடத்தில் தமது வலக்கையை வைத்துப் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்.
“இறைவா ! இந்த வலியைப் போக்குவாயாக. மனிதர்களுடைய அதிபதியே ! இவருக்கு உடல்நலத்தை வழங்குவாயாக. நீயே நலம் வழங்குபவனாக இருக்கிறாய்.
உன்னைத் தவிர வேறு எவரும் நலம் அளிப்பார்கள் எனும் நம்பிக்கை இல்லை. இவருக்கு நோயின் அறிகுறியே இல்லாது போகும் வகையில் நலம் அருள்வாயாக !”
நோயாளியை நலம் விசாரிப்பதாகச் சொல்லிக் கொண்டு ‘வளவள’ வென பேசிக் கொண்டிருப்பதையோ, அவருடைய ஓய்வுக்கும், அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்துவதையோ அண்ணலார் தடுத்துள்ளார்கள்.
“நோயாளியிடம் அதிக நேரம் அமராமல் இருப்பது, சத்தமும், கூச்சலும் போடாமல் இருப்பது நபி வழியாகும்” என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) எனும் நபித்தோழர் கூறுகிறார்.
முஸ்லிம் அல்லாத ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவரையும் சென்று சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்பது இஸ்லாம் கற்றுத்தரும் உயர் பண்பாடாகும்.
யூதச் சிறுவன் ஒருவன் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் பணி புரிந்து கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் நோய்வாய்ப்பட்டு விட்டான். ‘வேலைக்காரச்சிறுவன் தானே’ என்று அண்ணலார் அலட்சியப்படுத்தவில்லை. அந்த சிறுவனின் வீடு தேடிச் சென்று, அவனை நலம் விசாரித்து, அவனுடைய பெற்றோருக்கும் ஆறுதல் மொழி கூறிவிட்டு வந்தார்கள். இறைத்தூதரின் இந்த உயர்பண்பு கண்டு யூதக் குடும்பம் மனம் நெகிழ்ந்து போனது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள், இறைவன் கூறியதாக ஒரு படிப்பினை ஊட்டும் நிகழ்வை நமக்கு அறிவித்துத் தந்துள்ளார்கள்.
“ஆதத்துடைய மகனே, நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை வந்து நலம் விசாரிக்கவில்லையே” என்று இறைவன் மறுமையில் கூறுவான்.
அப்போது அடியான், “இறைவா, நீயே அனைத்துப் படைப்பினங்களின் அதிபதி. உன்னை எப்படி நான் நலம் விசாரிக்க முடியும்” என்று கேட்பான்.
அதற்கு இறைவன், “நான் படைத்த இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தான். நீ அங்கு சென்று அவனை நலம் விசாரித்திருந்தால், என்னை அங்கு கண்டிருப்பாய்” என்று கூறுவான்.
பார்த்தீர்களா…! ஒரு நோயாளியை நலம் விசாரித்தல் என்பது இறைவனையே நலம் விசாரிப்பது போலாகும் என்கிறது இஸ்லாம். என்னே உயர் பண்பாடு !
ஒரு முறை என் அலுவலக மேலாளர் நோய்வாய்ப்பட்டிருந்தார். நானும், உடன் பணியாற்றும் இன்னொரு நண்பரும் அவரை நலம் விசாரிப்பதற்காக மேலாளரின் வீட்டிற்குச் சென்றோம். உடன் வந்த நண்பர் மேலாளரை நலம் விசாரிப்பதற்குப் பதிலாக, வீட்டிலுள்ள பொருள்களை எல்லாம் நோட்டம் விட்டுக் கொண்டும், ‘இந்தத் தொலைக்காட்சிப் பெட்டியை எப்ப வாங்கினீங்க? நான் போன முறை வந்தபோது உங்கள் அறையில் ஏர்கண்டிஷன் இல்லையே, எப்போ ஏசி போட்டீங்க?’ என்றெல்லாம் தொணதொணக்கத் தொடங்கி விட்டார். இத்தகைய நடத்தையை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) எனும் நபித்தோழர் நோய்வாய்ப்பட்டிருந்த ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றார். அப்போது தம்முடன் சிலரை அழைத்துச் சென்றார். அங்கு ஒரு பெண் இருந்தார். நபித்தோழருடன் வந்தவர்களில் ஒருவர் அந்தப் பெண்ணை உற்று நோக்குவதை அறிந்தபோது, “நீர் அவளைப் பார்ப்பதைவிட உன் கண்களைப் பிடுங்கிக் கொள்வது நல்லது” என்று எச்சரித்தார்.
நோயாளிக்கு ஆறுதல் கூறுவதுடன், அவர் வசதியற்றவராக இருந்தால், அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்வதும் நலம் விசாரித்தலில் அடங்கும். அவருடைய நோயின் காரணமாகக் குடும்பம் வறுமையில் இருக்குமேயானால், அவருடைய குடும்பத்தினருக்கும் உதவும்படி இஸ்லாம் அறிவுறுத்துகிறது. நோயாளிக்கு எல்லா வகையிலும் ஒத்தாசையாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாம் கற்றுத்தரும் இனிய பண்பாடாகும்.
நன்றி: சிராஜுல் ஹஸன்
நன்றி : நர்கிஸ் – டிசம்பர் 2014

பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...!

பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...!

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.

2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.

3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.


4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.


5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.


6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.


7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.


8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.


9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.


10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.......................


நன்றி : சகோதரர் மணி விவேகானந்தன் 

அவன் பக்கமே நீங்கள் திரும்பக்கொண்டு வரப்படுவீர்கள்.

அவன் பக்கமே நீங்கள் திரும்பக்கொண்டு வரப்படுவீர்கள்.
********************************************************************
இவர்கள் எப்பொழுதேனும் பூமியில் சுற்றித்திரிந்து தங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்த்ததில்லையா?
அவர்கள் இவர்களைவிட அதிக வலிமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள்; பூமியை நன்கு பண்படுத்தினார்கள்; மேலும், இவர்களைக் காட்டிலும் அதிகமாக அவர்கள் அதில் வளமான வாழ்க்கையை நிர்மாணித்தார்கள்.
அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். பிறகு, அல்லாஹ் அவர்களுக்கு அக்கிரமம் புரிபவனாக இருந்ததில்லை. ஆனால், தமக்குத் தாமே அவர்கள் அக்கிரமம் புரிந்துகொண்டிருந்தார்கள்.
இறுதியில் எவர்கள் தீவினைகள் செய்து வந்தார்களோ அவர்களுடைய இறுதி முடிவு மிகவும் தீயதாகிவிட்டது. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யென்று கூறி அவற்றைப் பரிகாசம் செய்துகொண்டுமிருந்தார்கள்.
அல்லாஹ்தான் படைப்புகளை முதன் முறையாகப் படைக்கின்றான். பின்னர், அவனே அதை மீண்டும் படைப்பான். அவன் பக்கமே நீங்கள் திரும்பக்கொண்டு வரப்படுவீர்கள்.
திருக்குர்ஆன் அத்தியாயம் 30 அர்ரூம் 9-11

நன்றி : சகோதரர் அஜீஸ் லுத்புல்லாஹ் 

சிஸ்டத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தால் முதுகெலும்பு வளைந்து விடுமாம்!

ஐ.டி நிறுவங்களில் பணிபுரிவோர்களை திடீரென வேலையிலிருந்து நீக்கிவிடுகிறார்கள் என்ற குமுறல் கேட்டுக் கொண்டிருக்கிறது. வருத்தம் தான்!
முதலாளிகள் எப்போதும் தங்களுடைய நலனைப் பற்றி தான் யோசிப்பார்கள் என்கிற போது தொழிலாளர்களின் நலன்களைப் பற்றி யோசிப்பதற்கு தொழிலாளர்கள் தானே யோசித்திருக்க வேண்டும்.
உண்மையில் ஐ.டி துறைக்கென ஒரு தொழிற்சங்கம் இருக்கிறதா? இயங்குகிறதா? என்பது கூட என்னைப்போலவே பலருக்கும் தெரியாது. அப்படியே இருக்கும் பட்சத்தில் அதை இயங்க விடாமல் தடுப்பதற்கு தான் சகபணியாளர்களுக்கு இடையே போட்டியை உருவாக்கி விடுகிறார்களே.
ஏன் வேலையை விட்டு அனுப்புகிறீர்கள் என்று அருகில் இருக்கும் மற்றொருவன் கேட்டால் அவனுடைய வேலையும் போகும் என்று சொல்லத்தான் HR department இருக்கிறதே.
வேலையை விட்டு அனுப்பினால் தானே பிரச்சினை.. நான்கு பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருவன் தலையில் கட்டினால் தானாக மண்டையை பிய்த்து ஓடி விடுவானே என்ற வித்தையும் அவர்களுக்கு தெரியாமல் இல்லை.
இதெல்லாம் யாருக்கும் நிச்சயமாக புதிது அல்ல. நிச்சயம் எல்லாரும் அறிந்தது தான். இனி வரும் காலமாவது கை கோர்த்து வேண்டியவற்றை பெற்றுக் கொள்ளுங்கள். முப்பது நாட்கள் வருந்தி ஒன்றாம் தேதி பாங்க் பாலன்ஸ் பார்த்து மகிழ்ச்சி அடையாதீர்கள்.
இன்னொரு விஷயத்தையும் கவனம் கொள்ள வேண்டும். இப்படி ஒரு recession period போல் போங்கு காட்டி அரசாங்கத்திடம் பன்னாட்டு நிறுவனங்கள் இன்னும் சலுகைகளை எதிர்பார்க்கின்றதா? அல்லது அரசாங்கமே வேலையின்மையை காரணம் காட்டி இன்னும் சில பன்னாட்டு நிறுவனத்திற்கு கதவைத் திறந்து விட நாடகமாடுகிறதா என்பதையும் உற்று நோக்க வேண்டும்.
எது எப்படியோ நம்மிடம் ஒற்றுமையும் போராட்ட குணமும் இல்லாத போது எல்லாமே அவர்களுக்கு சாதகம் தான் என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.
சிஸ்டத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தால் முதுகெலும்பு வளைந்து விடுமாம்!

நன்றி : சகோதரர் விக்னேஷ் பாண்டிதுரை 

என் சமூகத்தினரே!

என் சமூகத்தினரே!
*****************************
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட உரை அது. ஃபிர்அவ்ன் என்கிற உலக மகா ஃபாசிஸ்டின் அவையில் இறைநம்பிக்கையாளர் ஒருவர் நிகழ்த்திய உரை.
அந்த அவையில் அன்று அவர் தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து முழங்கிய வார்த்தைகள் இன்றும் சூடு ஆறாமல் சுவை குன்றாமல் குர்ஆனில் பதிவாகி இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் அவருடைய உரை இடம் பெற்றுள்ள அத்தியாயத்திற்கும் அவரைக் குறிக்கின்ற விதத்தில் அல் முஃமின் (இறைநம்பிக்கையாளர்) என்றே பெயரிடப்பட்டுள்ளது.
இன்று வாசித்தாலும் மனம் கனக்கின்றது. கண்கள் கலங்குகின்றன. புதுத் தெம்பும் புத்துணர்வும் நாடி நரம்புகளிலெல்லாம் பொங்கிப் பரவுகின்றது. மகிழ்ச்சியும் உவகையும் துக்கமும் அழுகையும் ஒரு சேர வருகின்றன. இனம் புரியாத உணர்வால் மனம் நிறைகின்றது.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். குழந்தைகளைக் கொல்கின்ற கொடூர மனம் படைத்த, படை பலமும் பக்க பலமும் நிறைந்த, தன்னைத்தானே இறைவன் என்று சொல்லிக்கொள்கின்ற அளவுக்கு ஆணவமும் அகங்காரமும் திமிரும் தெனாவட்டும் நிறைந்த கொடியவனான ஃபிர்அவ்னின் அவையில் அவனுடைய துதிபாடிகளை வைத்துக்கொண்டே நிமிர்ந்த நெஞ்சும் நேரிய பார்வையுமாய் கணீர் கணீர் என்கிற குரலில் உணர்வுப் பிழம்பாய் உரை நிகழ்த்த வேண்டும் எனில் எந்த அளவுக்கு நெஞ்சுரம் இருந்திருக்க வேண்டும்? இறைவன் மீதான நம்பிக்கையும் பற்றும் அன்பும் எந்த அளவுக்கு அவருடைய உள்ளத்தில் நிறைந்திருக்க வேண்டும்?
இந்த உரையின் மையக் கருத்தாக எடுப்பாகத் தெரிவது மறுமைச் சிந்தனையும் இறைப்பற்றும்தாம்.
அதனை உணர்த்துகின்ற வாசகங்கள்தாம்:
‘என் சமூகத்தினரே!
இந்த உலக வாழ்க்கை சில நாட்கள்தாம்!
திண்ணமாக, மறுமைதான் நிலையான தங்குமிடமாகும்’ (திருக்குர்ஆன் அத்தியாயம் 40 அல் முஃமின் 39)
முழு அத்தியாயத்தையும் ஒரு முறை வாசித்துப் பாருங்களேன்....
நன்றி : சகோதரர் : டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

PK படமும் தமிழ்ப்படங்களும்

PK படமும் தமிழ்ப்படங்களும்
பிகே படம் 85 கோடியில் தயாரிக்கப்பட்டு 573 கோடி வசூலுடன் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் வாழ்க்கைமுறையையும் மதம், சாதி, ஏழ்மை அவலங்களையும் கூர்ந்து நோக்கி, அத்தகைய பார்வையில் எடுக்கப்பட்ட படங்கள் இயல்பாகவே வெற்றிபெற்றுள்ளன. அதில் ஸ்லம் டாக் மில்லியனரும் பிகே -யும் அடங்கும்.
கடவுள், மதம், மூடநம்பிக்கைகள் குறித்த நம் மக்களின் முன்முடிவுகளும், மரபணு வரை பதியவைக்கப்படும் முட்டாள்தனங்களும் மென்னய நகைச்சுவையுடன் பிகே படத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றன.
இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு வந்து, ஏன் தமிழில் இப்படி படங்கள் எடுக்கப்படவில்லை என்று நண்பர் கேட்டார்.
இந்தப்படத்தில் பேசப்படும், மதம் மற்றும் கடவுள் குறித்து ஏற்கெனவே சென்ற நூற்றாண்டு முழுவதும் தீவிரமாக விவாதிக்கப்பட்ட நிலம் தான் நமது. உண்மையில், அந்தப்படத்தில் சொல்லப்படும் எல்லாமே நாம் முன்பே அறிந்த விடயங்கள் தாம். எதுமே புதியது அன்று.
என்றாலும், இந்தப்படத்தில், மதங்களின் மூடநம்பிக்கைகளால் அடிமைத்தனங்களால் ஈர்க்கப்பட்டு, பாழும் குழியில் விழுந்து கிடக்கும் மக்களைக் கைப்பிடித்து இழுக்கும் வகையில் சுவைப்படச்சொல்லியிருப்பதும் ஒரு வெகுசனக்கலைவடிவமாக மாற்றுவதில் அடைந்திருக்கும் வெற்றியுமே இப்படத்தின் சிறப்பு.
தமிழில், கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, சமூகவிடயங்கள் பேசும் நிறைய படங்கள் எடுக்கப்படுகின்றன. ஏற்கெனவே எடுக்கவும்பட்டிருக்கின்றன. இருந்தாலும், அவை 'கலை அனுபவமாக' மாறாமல் வெறும் பிரச்சார சினிமாவாகவே தங்கி விடுவதால் பரந்த மக்கள்கூட்டத்தின் மனதில் தங்காமல், வெற்றியும் அடையாமல் போகின்றன.
இது பெரிய குறைபாடு தான். உண்மையில், ஒரு கருத்து மக்களைச் சென்று சேரவேண்டுமானால், நம் செய்யவேண்டியது அது சார்ந்த கலையனுபவத்தை மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பது தான். இதுவே ஒரு திரை இயக்குநனின் கடமை என்று நினைக்கிறேன்.
'மெட்ராஸ்' திரைப்படத்தின் வெற்றிக்கு, முதன்மையான காரணம் இதுவே.
நம்மிடம் இன்னொரு குறைபாடு, சமூகப்பிரச்சனை சார்ந்த படத்தை முன்வைத்தாலே, அது கலைவடிவம் இல்லை, அது ஓர் அரசியல் படம் என்று முற்றும் முழுதுமாகவே முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்துவிடுவது. இந்த இரண்டு முன்முடிவுகளையும் மாற்றிக்கொண்டால், நம் சினிமாவின் பயணமும் வேகமேடுத்ததாக வெற்றிபெற்றதாக இருக்கும்.
இன்னும் இன்னும், நாம் கொள்ளைப்படங்கள், கொலைப்படங்கள், கடத்தல் படங்கள், த்ரில்லர் படங்கள் எடுத்து இதுவே நம் மக்கள் விரும்புவது என்று நம்புகிறோம். உண்மையில், பிகே - வுக்கு அடுத்த நிலைப்படங்களை நம் இயக்குநர்களால் எடுக்க முடியும். ஆனால், நம் தேர்வு அவையாக இல்லை.
பிகே - படம், அது சொல்லிய விடயத்தில் தமிழ்ப்பார்வையாளர்களைப் பொறுத்தவரை அதன் தொடக்கநிலையிலேயே இருப்பதாக நம்புகிறேன். வாழ்வு மூலமாகவும் சிந்தனை மூலமாகவும் நாம் எப்பொழுதோ அந்தத் தொடக்கநிலைகளைக் கடந்துவந்துவிட்டோம். ஆனால், அதைக் கலையாக்கும் அரும்பணியில் ஈடுபடாமல் பின்தங்கியுள்ளோம் என்பதே நாம் உணரவேண்டியது.

நன்றி : சகோதரி குட்டி ரேவதி 

அண்ணல் நபிககளார் சொன்ன
கண்ணாடிப் பாடம்! 📚
அந்தப் பெரியவரின் கையில்
ஒரு கண்ணாடி.
அடிக்கடி அதைப் பார்ப்பார்.
பிறகு ஏதோ சிந்தனையில்
மூழ்கிவிடுவார்.
பக்கத்து வீட்டு இளைஞனுக்குக்
குறுகுறுப்பு…!
‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்
இருக்கிறது? பெரியவர்
அடிக்கடி அதையே உற்று உற்றுப்
பார்க்கிறாரே! ஒருவேளை மாயா ஜாலக்
கண்ணாடியோ?’
அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த
முடியவில்லை.
பெரியவரை நெருங்கினான்.
“ஐயா…!”
“என்ன தம்பி?”
“உங்கள் கையில்
இருப்பது கண்ணாடிதானே?”
“ஆமாம்!”
“அதில் என்ன தெரிகிறது?”
“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ
பார்த்தால் உன் முகம் தெரியும்!”
“அப்படியானால் சாதாரணக்
கண்ணாடிதானே அது?”
“ஆமாம்!”
“பிறகு ஏன் அதையே பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள்?”
பெரியவர் புன்னகைத்தார்.
“சாதாரணக் கண்ணாடிதான், ஆனால்
அது தரும் பாடங்கள் நிறைய!”
“பாடமா…! கண்ணாடியிடம் நாம் என்ன
பாடம் பெற முடியும்?”
“அப்படிக் கேள். நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் “உங்களில் ஒவ்வொருவரும்
மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்”
என்று சொல்லியிருக்கிறார்கள்.
எத்துணை ஆழமான உவமை இது!”
“இந்த உவமையில் என்ன இருக்கிறது?
எனக்கு ஒன்றும் புரியவில்லை!”
“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச்
சுட்டிக்காட்ட வேண்டும்; எப்படிச்
சீர்திருத்தம் செய்ய வேண்டும்
என்பதை யெல்லாம் இந்தச் சின்ன
உவமை மூலம் இறைத்தூதர் சிறப்பாகச்
சொல்லி விட்டார்!”
“எப்படி?”
“நம் முகத்தில் ஏதேனும்
அழுக்கோ கறையோ பட்டு விட்டால்
கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக்
கறையைக் கண்ணாடி கூட்டுவதும்
இல்லை, குறைப்பதும் இல்லை.
உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?
“ஆமாம்”
“அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்
எந்த அள வுக்குக்
குறை இருக்கிறதோ அந்த
அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட
வேண்டும்.
எதையும் மிகையாகவோ,
ஜோடித்தோ சொல்லக் கூடாது.
துரும்பைத் தூண் ஆக்கவோ,
கடுகை மலையாக்கவோ கூடாது.
இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
“அடடே…! வெரி இன்ட்ரஸ்டிங்! அடுத்து…?”
“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்
போதுதான் உன் குறையைக்
காட்டுகிறது. நீ அகன்று விட்டால்
கண்ணாடி மௌனமாகிவிடும்.
இல்லையா?”
“ஆமாம்!”
“அதே போல் மற்றவரின்
குறைகளை அவரிடம்
நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும்.
அவர் இல்லாத போது முதுகுக்குப்
பின்னால் பேசக்கூடாது.
இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”
“கிரேட்! அப்புறம்?”
“ஒருவருடைய முகக் கறையைக்
கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்
கண்ணாடி மீது கோபமோ,
எரிச்சலோ படு கிறாரா?”
“இல்லையே…! மாறாக அந்தக்
கண்ணாடியைப் பத்திர மாக
அல்லவா எடுத்து வைக்கிறார்!”
“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம்
உள்ள குறை களை யாரேனும் சுட்டிக்
காட்டினால் அவர் மீது கோபமோ,
எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்.
அந்தக் குறைகள் நம்மிடம்
இருக்குமேயானால் திருத்திக்கொள்ள
வேண்டும். இது கண்ணாடி தரும்
மூன்றாவது பாடம்!”
“ஐயா…! அருமையான விளக்கம். அண்ணல்
நபிகளார் கூறிய கண்ணாடி உவமையில்
இத்தனை கருத்துகளா…! அப்பப்பா!”
“யோசித்தால் இன்னும் கூடப் பல
விளக்கங்கள் கிடைக்கும்!”
“இனி கண்ணாடி முன்னால் நின்று என்
முகத்தை அலங் கரிக்கும் போதெல்லாம்
இந்த அறிவுரைகள் என்
மனத்தை அலங்கரிக்கும்!”
பெரியவர் இளைஞனின் முதுகில்
செல்லமாய்த் தட்டிக் கொடுத்தார்.


நன்றி : சகோதரர் சபர் கான் 

விமானம் கண்டுபிடித்தது இந்தியர்கள் 7000 ஆண்டுக்கு முன்பு - மாறுபட்ட அலசல்

புராண காலத்திலேயே 
விமானம் இருந்ததாகவும் அதை இந்துக்கள் கண்டு பிடித்ததாகவும் காவிகள் சொல்கிறார்கள்.
சொல்லட்டும் !

இவர்கள் சொல்வது மாதிரியல்ல...
இன்னும் கொஞ்சம் அட்வான்சா சொல்லணும் .

இந்த விமானம் 
புஷ்பக விமானம். எல்லாம் 
இந்த காவிகள் சொல்ற புராண காலத்துக்கு முன்னாலேயே இருக்கு.

ஆயிரத்து ஒரு அரபுக் கதைகள்
ஹாத்திம்தாய் கதைகள் 
நாம்படித்ததில்லையா ?

அலிபாபாவும் 40 திருடர்களும் கதையில்
" அண்டாகா கசம் அபுல் ஹுகும் திறந்திடும் ஷீஷே " ன்னு பாஸ்வேர்டை கண்டு பிடிச்சவனே சாயிபுதான்.

உண்மையில் இவங்க சொல்ற புராணகாலத்துக்கு முன்னாலேயே
விமானத்தையும் கண்டு பிடித்தவர்கள் முஸ்லிம்கள்தான்.

கொஞ்சம் விளக்கமா சொல்றேன் !
நம்ம சிந்துபாத் இருக்காரே ...
எத்தனை ஆயிரம் வருஷத்துக்கு முன்னால வாழ்ந்த ஆளு !
ராமரு 
கிருஷ்ணரு 
இவங்களுக்கெல்லாம்
ரொம்ப ரொம்ப மூத்த தலைமுறை ஆளு.
தந்திகாரன்கிட்ட கேட்டா கரெக்டா சொல்வான்.

அந்த சிந்துபாத் அப்பவே பறக்கும் கம்பளத்தில பறந்து சாதனை படைத்த ஆளாக்கும்.
அவருக்கு வில்லன் யாரு தெரியுமா ?
மந்திரவாதி மூசா.
அவன் படுபயங்கரமான விஞ்ஞானி .

மரம் மலை இலை எல்லாத்தையும் அந்த ஆளு பறக்க வச்சிருக்கான்.
ஏழு கடல் ஏழுமலை எல்லாத்தையும் பார்த்த ஆளு சிந்துபாத்.
அட கடலுக்குள்ள போயி கடல்கன்னிகளையே
கலாய்சுட்டு வந்த ஆளு அவரு.
அது மட்டுமா ?
பாதாள உலகத்திலும் பாய்ஞ்சு போயி சாகசம் பண்ணியிருக்காரு.

இந்த மூசா இருக்காரே ...
அப்பவே நானோ விஞ்ஞானி .
சிந்துபாத்தின் காதலி அஞ்சரை அடி உயர லைலாவை அரை அடியா சின்னதாக்கி வெற்றிலை பெட்டியில அடச்சுருவாரு.
அது என்ன சாதாரண விஞ்ஞானமா ?
ஸ்கூலுக்கு போற சின்ன பாப்பாங்க வாட்டர்பேக்கை தோளில் போட்டுட்டு போற மாதிரி சிந்துபாத் லைலா இருக்கிற பொட்டியை தோளில் போட்டுட்டு ஓடுவாரு சாடுவாரு குதிப்பாரு பறப்பாரு .. எல்லாம் செய்வாரு .




அது மட்டுமில்லே ..
அப்பவே கிளிக்கு உடல்ல யானையின் உசுரையே அடச்சு வச்சு அசுரத்தனமான சாதனையெல்லாம் பண்ணியிருக்காரு மூசா.
யானைத்தலை ஆப்பரேசனுக்கு முன்னாலே
உயிர்மாற்று அறுவை சிகிச்சை செய்தவர் முஸ்லிம் மூசா.

உண்மயைச் சொன்னா நூறு பாரத ரத்னா அவார்டு சிந்துபாத்துக்கும் மூசாவுக்கும்தான் கொடுக்கணும்.
ஆனா கொடுக்கமாட்டாங்க.
ஏன்னா...
சிந்துபாத்
மூசா
ஹாத்திம்தாய்
இவங்கல்லாம் முஸ்லிம்கள் .

அவங்க கொடுக்கலன்னாலும் ஒண்ணும் கெட்டு போயிடாது. நாம கொடுப்போம்.
நவீன விஞ்ஞானத்தின் பிதாமகன்கள்
சிந்துபாத்தும்
மூசாவும்
ஹாத்திம்தாயும்தான்.

வரலாறு எழுதியாச்சு
காப்பாற்ற வேண்டியது உங்க பொறுப்பு...

நன்றி : சகோதரர் அபு ஹாஷிமா 

ஆக்கபூர்வமான படிப்பு

இளைஞர் பட்டாளமே ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடு. ஆக்கம் ஒன்றே ஊக்கம் தரும் . நாடு எனக்கு என்ன செய்தது என்று கேட்பதை விட நீங்கள் நாட்டுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்ற தொலைநோக்குடன் செயல்படுங்கள். உங்கள் கைகளில் நாளைய இந்தியா . 



ஏதேனும் தொழில் பழகுங்கள் அதிக ஊதியம் பெற்று தரும் வேலை கணினி / மென்பொருள் சார்ந்த துறையே என்கிற சிந்தனை மாயை உங்களை இந்த சிந்தனை உலோபி ஆக்கிவிடும் . சிந்தித்திடு / செயல்படு இன்றே செய் அதனை நன்றே செய் . உன்னால் முடியும் தோழா

மாற்றம்

மாற்று அரசியல் / மாற்று விவசாயம் / மாற்று பொருளாதாரம் / மாற்று சிந்தனை பற்றி மட்டுமே பேசிகொண்டிருந்த நாம் இன்று மாற்று தொழில் / மாற்று வேலைவாய்ப்பு பற்றி சிந்திக்க பேச வேண்டிய தருணம் இது . நிலையில்லா தொழிலை சார்ந்து அதனில் மட்டும் திறமை வளர்த்து கொண்ட நாம் மற்றதை புறக்கணிப்பது ஏனோ ? சிந்தியுங்கள் / செயல்படுங்கள் எழுச்சி பெறுவீர் வென்றிடுவீர் .
மாற்றம் ஒன்றே நிலையானது.

எதில் மகிழ்ச்சி!!!

எதில் மகிழ்ச்சி!!!
ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.
எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன் ,அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார்.இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.
உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.
இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள்,அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார்.
அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.
இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார்,’இது தான் வாழ்க்கை.எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’.
’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது.அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.

நாளை அனைவருக்கும் சந்தோஷமாய் மலரட்டும் ..!! 
டிஸ்கி : படித்ததில் பிடித்தது 

கோமாளிகளின் கோணங்கித்தனம்..! - வேஷ்டி தினம் ஓர் பார்வை

கோமாளிகளின் கோணங்கித்தனம்..!
“டேய் வேட்டி கட்டிய பயலயெல்லாம் கீழே உக்கார வைடா. பேண்ட்,கோட் போட்டவனை எல்லாம் சேர்ல உக்கார வைடா!”
இந்த வரிகள் நடிகவேள் எம்.ஆர்.ராதாவால் ரத்தக் கண்ணீர் படத்தில் சொல்லப்பட்ட வசனம். எம்.ஆர்.ராதா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் இன்றையச் சட்டவிதி நடைமுறையை நையாண்டி செய்து இருக்கிறார்.
வேட்டி என்பது கலாச்சாரச் சின்னம். பண்பாட்டு வெளிப்பாடு, தனிமனித சுதந்திரம், இதைத் தடுப்பது தவறு என்றெல்லாம் இன்றையச் சட்டமன்றத்தில்கூட விளக்கமும் எதிர்ப்பும் தரப்பட்டிருக்கிறது.
கிரிக்கெட் கிளப்பில், அவர்களுக்குள்ள உரிமையில், வேட்டி கட்டிய மனிதர்களுக்குக் கிளப்புக்குள் இடமில்லை என்று விதிவகுத்துக் கொண்டார்கள். இந்த விதியால் இன்றைக்குப் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள்.
கிரிக்கெட் கிளப்புக்குள் வேட்டி அணிந்து வந்த இவர்களை கிளப்பின் சட்டவிதியைக் காட்டி உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்.
சட்டத்தின் காவலர்கள், கிளப்பின் இந்த சட்டவிதிக்கு மரியாதைக் கொடுத்து திரும்ப வந்துவிட்டார்கள்.
ஆனால் இந்தச் செயல், சட்டத்துறைக்கே நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான அவச்செயல்.
வேட்டி, கலாச்சார சின்னம், பண்பாட்டு அடையாளம் என்று மட்டும் பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
மனிதக் கலாச்சாரத்தின் முதல் கலாச்சாரம் அம்மண நிலைதான். அடுத்தடுத்த வளர்ச்சியில் இலை, தளை ஆடைதான் கலாச்சார சின்னம். அதற்கும் அடுத்தடுத்த நிலையில் விலங்குத் தோல். அதற்கும் அடுத்த நிலையில் துணி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. அதிலும் வேட்டி அல்ல, கோமணம்தான். அதற்குப் பின் வேட்டி வந்தது.
இந்த அடிப்படையில் பார்த்தால் ஆடைக் கலாச்சாரம் என்பது ஒரு நிரந்திர அடையாளம் அல்ல. காலத்துக்கு காலம் உருமாற்றம் பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய ஒன்றுதான்.
வேட்டிக்கும் இந்த வரலாறு பொருந்தும்.
கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்று இருக்கும் ஆடை அவமதிப்பு நிகழ்ச்சியை ஒரு கலாச்சார அவமதிப்பு என்று சுருக்கிப் பார்க்க வேண்டாம்.
அதையும் தாண்டி மிகவும் கேவலமான , கொடூரமான தீண்டாமை அவமதிப்பு இந்த நிகழ்வில் இருக்கிறது.
வேட்டி என்ற ஒரு ஆடையை எதனால் கிரிக்கெட் கிளப் தவிர்த்து இருக்கிறது என்ற காரணம் ஆராயப்பட வேண்டும்.
பொதுவாக மேல்தட்டு வர்க்கம், மேட்டிமைச் சமுதாயம், செல்வப் பிரதிநிதிகள், கற்று அறிந்தவர்கள் வேட்டியை ஒரு அவமானச் சின்னமாகப் புறமொதுக்கி விட்டார்கள்.
வேட்டி என்பது பாமரர்களின், பட்டிக்காட்டான்களின், தாழ்நிலைச் சமுதாயத்தவரின் அடையாளமாக மாறிவிட்டதாகச் சமூக நிலையின் எண்ணப் பிரதிபலிப்பு இருக்கிறது.
இந்த உண்மையின் அடிப்படையில்தான் வேட்டிக்குக் கீழ்நிலைப் படித்தரம் வந்து இருக்கிறது.
கிரிக்கெட் என்பது மேல்தர வர்க்கத்தின் விளையாட்டு. அவர்களுக்குரிய கிளப்பில் உயர் வகுப்பினர்தான் பங்கு கொள்ள வேண்டும். உயர் வகுப்பினரின் அடையாளம், கலாச்சாரம் மேலை நாட்டு உடை அலங்காரம் என்று தீர்மானிக்கப் பட்டுவிட்டது.
அதாவது அவர்கள் மேலானவர்கள். உயர் வகுப்பினர்கள். வேட்டி கட்டியவர்கள் தாழ்வானவர்கள். கீழ்தரமானவர்கள் என்ற சாதீய குணம் நடைமுறைக்கு வந்துவிட்டது.
இந்தச் செயல் தீண்டாமைக் குற்றத்திற்குரிய தகுதி பெற்று இருக்கிறது. இந்தத் தீண்டாமை மேல் வர்க்க அறிவு ஜீவிகளான உயர்ந்தவர்களையே வேட்டி கட்டிய காரணத்தினால் கீழ்ச்சாதியாக மாற்றிவிட்ட்து.
தீண்டாமைக் குற்றம் நீதிமனிதர்களையே தீண்டி இருக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டின் போது தேசியக் கொடியை உடலில் கண்ட இடத்திலும் வரைந்து கொண்டு தேசப் பற்றைக் காட்டும் கோமாளித்தனமான முட்டாள்களை ரசிகப் பெருமக்கள் எனப் பிதற்றித் திரியும் கிரிக்கெட் வாரியம், வேட்டி அணிதலைக் கொச்சத்தனமானது என்று குறிக்கிற தைரியம் எங்கிருந்து வந்தது? தேசியக் கொடி அதன் தரம் தாழ்ந்து அவமானப் படுத்தப் பட்டிருக்கிறது. எந்த நீதிமன்றமும் இதுபற்றி இதுவரை கருத்துக் கூறியதில்லை.
கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் குத்தாட்டத்தில் தேசியக் கொடிக்குள்ள சட்டவிதி பேணப் பட்டிருக்கிறதா? ஆனால் கிரிக்கெட் கிளப்பின் சட்டவிதி நீதிவான்களுக்கே இப்பொழுது நடைமுறையாக்கப்பட்டு இருக்கிறது.
பதினொரு முட்டாள்களின் ஆட்டத்தைப் பல ஆயிரம் மக்கள் ரசிக்கும் முட்டாள்தனத்திற்குப் பேத்தனமான ஆதரவு தந்ததின் காரணத்தால் இந்தப் பித்தாலாட்டங்கள் நடைமுறைப்படுகின்றன.
இந்த விளையாட்டை அரசியல் மேதைகளும் கல்வி மகான்களும் தங்கள் வேலையைப் புறம் ஒதுக்கிவிட்டு வந்து ரசித்த வீணத்தனத்தின் விபரீதம் இப்பொழுது விளையாடி இருக்கிறது.
இந்த வாரியத்தின் தலைவராக மத்திய அமைச்சர் பேன்ற மாண்புமிகுகள் இருக்கின்ற மோசமான விளைவும் சூதாட்டமாக மாறி மக்களை ஏளனப் படுத்துகிறது. தனிச்சட்டம் அமைத்து தீண்டாமையை முன்னிலைப் படுத்துகிறது.
நீதிமன்றங்கள், ஆட்சி அதிகாரங்கள் விழிப்படைய வேண்டும். இந்த வாரியத்திற்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள், மானியங்கள், ஒதுக்கப்படும் இடங்கள் அனைத்தும் மக்களின் வரிப் பணத்தினுடைய வெளிவடிவம்தான்.
இதற்கு மேலும் பண்பாடு, கலாச்சாரம் என்று ஒரு குறுகிய எல்லைக்குள் இதைக் கொண்டு போய் நிறுத்தாமல் இது ஒரு ஒட்டு மொத்த சமூக அவலம் என்ற தீர்மானத்தில் இறங்கி மக்கள் சக்தி முன்னெழுந்து வரவேண்டும்.
தேசத்தந்தை காந்தியடிகள் இன்றைய கிரிக்கெட் கிளப்புக்குள் போக முடியாது. ஏனென்றால் வேட்டியைத் தவிர வேறு ஆடைகளை அவர் முற்றிலுமாக துறந்தவர்.
இதுதான் தக்க தருணம். இதுதான் நேர்மைக்கு நாம் உறுதி சேர்க்க வேண்டிய உன்னத வாய்ப்புக் காலம்.

நன்றி : சகோதரர்  ஹிலால் முஸ்தபா சென்னை 

தீவிரவாதி பாய்ஸ் ஒரு நிமிடம்

தீவிரவாதி பாய்ஸ் ஒரு நிமிடம்
நில்லுங்க! மத பெயரை வைத்து
மனிதர்களை போட்டுத் தள்றீங்க!
சரி அது ஒங்க விருப்பம்!

நாங்க சொன்னா கேக்கவா போறீங்க!
துப்பாக்கியை எங்க பக்கம் திருப்பிடுவீங்க!
ஆனால் ஒண்ணே ஒண்ணு மட்டும் செய்ங்க!  உங்கள் வேலை முடிந்தவுடன்
ஏன் ஒடி ஒளிஞ்சிடறீங்க!
உலக முஸ்லீம்கள் அனைவரும் ஒரே மைதானத்தில் ஒன்று கூடி ஆட்களை தேர்வு செய்து சென்று வா! வென்று
வா மகனே சாரி கொன்று வா மகனே ! அப்படின்னு அனுப்பிய மாதிரி அனைத்து
முஸ்லிம்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார்கள்! நீங்கள்லாம் யாரு! எங்கேருந்து வர்றீங்கன்னே எங்களுக்கு
தெரியாதே!
நீங்கள்லாம் தைரியமானவர்கள்
என்றும் துணிச்சல்காரர்கள் என்றும் உலகம் நம்புதே! அப்புறம் ஏன் ஓடி
ஒளியறீங்க! நின்று தைரியமாக உங்கள் முகங்களை காட்டி, இன்ன காரணத்துக்காக இதை செய்தேன் என்று சொல்லுங்கள்!உங்களின் பூர்வீகம் என்ன! உங்கள் பின்னணி என்ன சொல்லுங்களேன்!
உங்கள் தரப்பில் நியாயம் இருந்தால் உலக மக்கள் அதை உணரட்டுமே!
நீங்க முகத்தை மறைச்சிடறீங்க!
உலகம் உங்க அடையாளத்தை எங்கள் ஒவ்வொருவர் முகத்திலும் பொருத்தி
பார்க்குதே!



நன்றி :  சகோதரர் முஹம்மத் ரபியுதீன் - பாரிஸ் பிரான்ஸ்