Friday, January 9, 2015

விமானம் கண்டுபிடித்தது இந்தியர்கள் 7000 ஆண்டுக்கு முன்பு - மாறுபட்ட அலசல்

புராண காலத்திலேயே 
விமானம் இருந்ததாகவும் அதை இந்துக்கள் கண்டு பிடித்ததாகவும் காவிகள் சொல்கிறார்கள்.
சொல்லட்டும் !

இவர்கள் சொல்வது மாதிரியல்ல...
இன்னும் கொஞ்சம் அட்வான்சா சொல்லணும் .

இந்த விமானம் 
புஷ்பக விமானம். எல்லாம் 
இந்த காவிகள் சொல்ற புராண காலத்துக்கு முன்னாலேயே இருக்கு.

ஆயிரத்து ஒரு அரபுக் கதைகள்
ஹாத்திம்தாய் கதைகள் 
நாம்படித்ததில்லையா ?

அலிபாபாவும் 40 திருடர்களும் கதையில்
" அண்டாகா கசம் அபுல் ஹுகும் திறந்திடும் ஷீஷே " ன்னு பாஸ்வேர்டை கண்டு பிடிச்சவனே சாயிபுதான்.

உண்மையில் இவங்க சொல்ற புராணகாலத்துக்கு முன்னாலேயே
விமானத்தையும் கண்டு பிடித்தவர்கள் முஸ்லிம்கள்தான்.

கொஞ்சம் விளக்கமா சொல்றேன் !
நம்ம சிந்துபாத் இருக்காரே ...
எத்தனை ஆயிரம் வருஷத்துக்கு முன்னால வாழ்ந்த ஆளு !
ராமரு 
கிருஷ்ணரு 
இவங்களுக்கெல்லாம்
ரொம்ப ரொம்ப மூத்த தலைமுறை ஆளு.
தந்திகாரன்கிட்ட கேட்டா கரெக்டா சொல்வான்.

அந்த சிந்துபாத் அப்பவே பறக்கும் கம்பளத்தில பறந்து சாதனை படைத்த ஆளாக்கும்.
அவருக்கு வில்லன் யாரு தெரியுமா ?
மந்திரவாதி மூசா.
அவன் படுபயங்கரமான விஞ்ஞானி .

மரம் மலை இலை எல்லாத்தையும் அந்த ஆளு பறக்க வச்சிருக்கான்.
ஏழு கடல் ஏழுமலை எல்லாத்தையும் பார்த்த ஆளு சிந்துபாத்.
அட கடலுக்குள்ள போயி கடல்கன்னிகளையே
கலாய்சுட்டு வந்த ஆளு அவரு.
அது மட்டுமா ?
பாதாள உலகத்திலும் பாய்ஞ்சு போயி சாகசம் பண்ணியிருக்காரு.

இந்த மூசா இருக்காரே ...
அப்பவே நானோ விஞ்ஞானி .
சிந்துபாத்தின் காதலி அஞ்சரை அடி உயர லைலாவை அரை அடியா சின்னதாக்கி வெற்றிலை பெட்டியில அடச்சுருவாரு.
அது என்ன சாதாரண விஞ்ஞானமா ?
ஸ்கூலுக்கு போற சின்ன பாப்பாங்க வாட்டர்பேக்கை தோளில் போட்டுட்டு போற மாதிரி சிந்துபாத் லைலா இருக்கிற பொட்டியை தோளில் போட்டுட்டு ஓடுவாரு சாடுவாரு குதிப்பாரு பறப்பாரு .. எல்லாம் செய்வாரு .




அது மட்டுமில்லே ..
அப்பவே கிளிக்கு உடல்ல யானையின் உசுரையே அடச்சு வச்சு அசுரத்தனமான சாதனையெல்லாம் பண்ணியிருக்காரு மூசா.
யானைத்தலை ஆப்பரேசனுக்கு முன்னாலே
உயிர்மாற்று அறுவை சிகிச்சை செய்தவர் முஸ்லிம் மூசா.

உண்மயைச் சொன்னா நூறு பாரத ரத்னா அவார்டு சிந்துபாத்துக்கும் மூசாவுக்கும்தான் கொடுக்கணும்.
ஆனா கொடுக்கமாட்டாங்க.
ஏன்னா...
சிந்துபாத்
மூசா
ஹாத்திம்தாய்
இவங்கல்லாம் முஸ்லிம்கள் .

அவங்க கொடுக்கலன்னாலும் ஒண்ணும் கெட்டு போயிடாது. நாம கொடுப்போம்.
நவீன விஞ்ஞானத்தின் பிதாமகன்கள்
சிந்துபாத்தும்
மூசாவும்
ஹாத்திம்தாயும்தான்.

வரலாறு எழுதியாச்சு
காப்பாற்ற வேண்டியது உங்க பொறுப்பு...

நன்றி : சகோதரர் அபு ஹாஷிமா 

No comments:

Post a Comment