வாழ்கையில் மறக்கமுடியாத சில தருணங்கள் / புகைப்படங்கள் இருப்பதுண்டு அறிந்தோ அறியாமலோ அதனை பாதுகாக்கிறோம். அந்த புகைப்படங்கள் வாழ்வில் இனிய /மறக்கமுடியாத தருணங்களை பிரதிபலிக்கும். அந்த புகைப்படங்கள் நமது கற்பனை குதிரையை சிறகடித்து ஓடவிடும் .
நான் சமீபத்தில் அண்ணன் முஹம்மத் ரபியுதீன் அவர்களின் படத்தை பற்றி கருத்து சொன்ன பொழுது அவர்களது எழுத்தையும் அவர்களின் கடமை பற்றியும் எழுதினேன் நகைச்சுவையுடன் தனது கருத்தை நேர்த்தியாக மிக ஆழமாக மனம் புண்படா வண்ணம் எடுத்துரைக்கும் அவரது பாணி தனி. அவர்களின் புகைப்படம் பற்றி நான் கருத்துரைத்த போது அது அவருக்கு சிலவற்றை ஞாபகம் ஊட்டுவதாகவும் அந்த புகைப்படம் அவர்களுக்கு மிகவும் பிடித்தது மனதிற்கு உகப்பானது என்றும் குறிப்பிட்டார்.
யான் அறியேன் அன்று அப்படி ஒரு தருணம் எனக்கும் அருகாமையில் உள்ளது என்று அந்த தருணத்தை எனக்கு நேற்று ஏற்படுத்தி தந்தவர் ஜனாப் இக்வான் அமீர் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு ஒரு படத்தை நான் ஒளியூட்டி தருமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தேன் அதை உடனே செய்து தந்தார் சிறிது நேரம் கழித்து அந்த புகைபடத்தை மேலும் மெருகூட்டி இரண்டு தினத்தில் உங்களுக்கு பரிசளிப்பேன் என்று கூறினார் .
இது வரை நாங்கள் சந்தித்தது இல்லை, பேசியது இல்லை, முகநூல் நட்பு மட்டுமே. நேற்றிரவு எனக்கு அந்த புகைபடம் அனுப்பி தந்தார்/ பரிசளித்தார் எனது வாழ்வின்
ஓர் மறக்க முடியாத தருணம் அது .அவர்களது மகள் சகோதரி மரியம் இக்வான் அமீர் அவர்களின் இரண்டு நாள் கடின உழைப்பு அந்த புகைபடத்தில் பிரதிபலித்தது . மனதிற்கினிய நினைவுகள் சிலவற்றை நினைவுபடுத்தும் அந்த புகைப்படம் எனது வாழ்விலும் நடந்தது சகோதரர் முஹம்மத் ரபியுதீன் சொன்ன அந்த சிறப்பான தருணத்தை நானும் அனுபவித்தேன் . எனது கண்களில் ஆனந்த கண்ணீர் இப்படியும் ஒரு நட்பினை எனக்கு தந்தருளிய ஏக இறைவனுக்கே அனைத்து புகழும்.
No comments:
Post a Comment